பல்லாங்குழி சாலை

Update: 2022-08-01 15:22 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி மேலவன்னிப்பட்டு கிராமம் மன்னார்குடி- ஒரத்தநாடு இணைப்பு சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்