கரடு முரடான சாலை

Update: 2022-08-01 14:13 GMT
மரக்காணம் அருகே பச்சைபைத்தான்கொள்ளை கிராமத்தில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலை கரடு முரடாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை அவ்வழியாக எடுத்துச்சென்று அடக்கம் செய்யக்கூட அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சிதிலமடைந்து கிடக்கும் சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்