ஓசூர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து பெரியார்நகர் வரை செல்லும் உள்வட்ட சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதி சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகுமார், ஓசூர்.