சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-31 10:41 GMT

தஞ்சை மாவட்டம், மாதாக்கோட்டை, வளனார் நகரில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மண்பாதையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்