சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-31 10:40 GMT
தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதி புங்கனூர் கிராமத்தில் இருந்து வெண்டயம்பட்டிக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டும்,குழியுமான சாலையினால் வகான ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்