மயிலாடுதுறை மாவட்டம் கடகம் பகுதி பனையகுடியில் இறந்தவர்களின் உடல்களை மயானம் எடுத்து செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் உடல்களை மண்பாதை வழியாக எடுத்து சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மயானம் செல்வதற்கான பாதையில் தார்சாலை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?