சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-30 10:14 GMT
மயிலாடுதுறை பகுதி கடக்கம்- புலவனூர் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்