மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி கெங்காநகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவுநீரில் நடப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்காதவாறு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.