சேலம் ஆண்டிபட்டி ஊராட்சி 9-வது வார்டில் பெரியான்டிச்சி கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும்.
-மணிகண்டன், சேலம்.