கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பாலத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மதுஅருந்துவது, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை திருடுவது, பஸ்சில் இருந்து இறங்கி வரும் பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிளியனூர் பாலம் அருகே கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.