திருச்சி ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் வயர்லெஸ் சாலையில் இருந்து வசந்த நகர் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள முக்கிய சாலையான மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் சாலைகள் பறிக்கப்பட்டு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சேரும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.