ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சானசந்திரம் கடவுள் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதுடன், மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சி.ராமாஞ்சி ரெட்டி, சானசந்திரம், ஓசூர்.