திருச்சி மாவட்டம், புள்ளம்பாடிபேரூராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பஸ் நிலையம் சாலைப் பகுதி சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி சுமார் 100 பஸ்கள் திருச்சியில் இருந்து சிதம்பரம், கடலூர், அரியலூர், திருமானூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.