சேறும், சகதியுமான சாலை

Update: 2022-07-28 11:45 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கரிசல்குளம் மேற்கு தெரு சாலை மண் ரோடாக உள்ளது. இந்த சாலையில் வாருகால் வசதி கிடையாது. இதனால் கழிவுநீரானது சாலையிலேயே தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து வாருகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மாரிமுத்து, கரிசல்குளம்.

மேலும் செய்திகள்