ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடை, வீடு முதலியன கட்டியுள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.