நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து வாட்டர் டேங்க் ரோடு செல்லும் சாலையின் திருப்பம் உள்ளது. இந்த திருப்பத்தில் மாலை நேரங்களில் சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால், கடைகளுக்கு வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபின், சைமன் நகர்.