குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-27 13:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடியில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் அடிக்கடி இந்த பகுதியில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்