வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-26 17:48 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வனவாசி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் வனவாசி பஸ் நிறுத்தத்தில் அதிக அளவில் கடைகளும் உள்ளன. இதனால் அந்த பகுதி வாகனங்கள் நிறைந்த சாலையாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நங்கவள்ளி-ஜலகண்டாபுரம் சாலையில் வனவாசி மேல்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-அர்ஜூன், வனவாசி, சேலம்.

மேலும் செய்திகள்