குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-07-26 13:42 GMT
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமம் தோப்பு தெருவில் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

மேலும் செய்திகள்