போக்குவரத்திற்கு தகுதியற்ற இணைப்பு சாலை

Update: 2022-07-26 12:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறமாக பர்மா காலனி வழியாக செரியலூர், வேம்பங்குடி செல்லும் இணைப்புச்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சாலையிலேயே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்