மதுரை மாநகராட்சி பீ.பீ.குளம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியில் உள்ள தார்சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சேதமடைந்து காணப்படும் இந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்கள் பழுதாவதுடன், விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.