சாலையில் தேங்கிய மழைநீர்

Update: 2023-09-20 07:33 GMT

திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சாலையில் கண்டன்விளை உள்ளது. இந்த சாலையில் இரணியல் வள்ளியாற்று பாலம் அருகில் சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்த்,இரணியல்.

மேலும் செய்திகள்