சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-09-17 17:50 GMT
திண்டிவனம் திருநாவுக்கரசர் நகரில் உள்ள சாலையை பாதாள சாக்கடை திட்டத்திற்காக பெயர்த்து எடுத்து பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்தை மட்டும் மூடிவிட்டு, புதிதாக சாலை அமைக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் உடனடியாக தார்சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்