நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-09-13 08:55 GMT

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் பண்ணையூர் உள்ளது. இந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த பகுதி வளைவான இடம் என்பதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்