மோசமான சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2023-09-10 19:34 GMT
பெங்களூரு ஜெயநகர் 5-வது பிளாக்கில் 36-வது கிராஸ் மற்றும் 38-வது கிராஸ் சாலையில் கடந்த மே மாதம் பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்தும் சாலையை சீரமைக்காமல் உள்ளனர். நீண்ட நாட்களாக சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்