நடுவீரப்பட்டு அருகே சென்னப்பநாயக்கன் பாளையத்திலிருந்து புதுப்பாளையம் செல்லும் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள் ஊசிபோல் காணப்படுவதால், இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயரை பதம் பார்த்து விடுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.