செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் மாடுகள் ஆங்காங்கே படுத்துக் கிடப்பதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்குவதும் அடிக்கடி நடக்கிரது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.