சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மடிப்பாக்கம், அண்ணாநகர், மாகாலட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர் பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களை முறையாக சீரமைப்பது கிடையாது. கட்டிடக்கழிவுகளை கொட்டி பள்ளங்களை நிரப்பி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.