புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-03 12:25 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், மேம்பாலம் கீழ் உள்ள கரூர் சாலை முதல் கந்தம்பாளையம் வரை சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதற்காக கரூர் சாலை பகுதிகளிலிருந்த பாறைகள் எல்லாம் அகற்றி விட்டு, தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில், சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்