தடுப்பு கட்டைகள் அமைக்க கோரிக்கை

Update: 2023-09-03 11:54 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாலத்தின் தடுப்பு கட்டைகள் மற்றும் மின் கம்பம் உடைந்து அனுகுசாலையில் உள்ளன. இதுவரை அவற்றை சரிசெய்யும் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த அனுகுசாலை வழியாகத்தான் கொள்ளிடம் போலீஸ் நிலையம், 2 பள்ளிகள், மின்வாரிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். எனவே சாலை போக்குவரத்து நிறைந்த இந்த சாலையாக உள்ளதால் தடுப்பு கட்டைகளை உடனே சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்