வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-09-03 11:54 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட முதன்மை சாலையிலிருந்து திருமங்கலத்திற்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் முதன்மை சாலையிலிருந்து உள்ளே செல்லும் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் செல்வதுடன், ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கழிவுநீர் வாய்க்காலில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் இப்பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்