குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-07-25 13:07 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையம் வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ, பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் போன்றவை சென்று வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதுபோல இந்த குண்டும், குழியுமான சாலையில் வாகனங்களை இயக்கும்போது வாகனங்கள் பழுதாகிறது. எனவே பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் சேதமடைந்து சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்