ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டி அவதிகள்

Update: 2023-08-30 12:25 GMT

ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டி அவதிகள்

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயன் கோவில் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் பாதை உள்ளது இங்கு சாலை பராமரிக்கும் பணிக்காக ஜல்லிகற்கள் ரோட்டில் பரப்பி விடப்பட்டது.ஒரு மாதம் ஆகியும் ரோடு பராமரிக்கும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வழியாக தினமும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மாணவ மாணவிகளும் சைக்கிளில் சென்று வருகின்றனர்.கரடு முரடான ஜல்லிபரப்பப்பட்ட ரோட்டில் செல்பவர்கள் படு திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ஞானவேல்,அவினாசி.

9867337632

மேலும் செய்திகள்