ஜல்லிக்கொட்டியாச்சு.. சாலை அமைக்கலயே...

Update: 2023-08-30 09:27 GMT
திண்டிவனம் அருகே தென்பசாரில் இருந்து அவ்வையார்குப்பம் செல்லும் சாலை சேதமடைந்ததால், அதை பெயர்த்து விட்டு, புதிதாக சாலை அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்