கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-08-23 16:03 GMT

நெல்லை-பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் அருகில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்காமல் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது காற்றில் தூசிகள் பறந்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்