வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-08-23 10:35 GMT

கோவை பீளமேடு கள்ளிமேடு தெருவில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மழை பெய்து விட்டால், அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்