வடலூர் உழவர் சந்தை அருகே எஸ்.எல். தெருவில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் அப்பகுதியில் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.