சேறும், சகதியுமான சாலை

Update: 2023-08-16 11:10 GMT

திருச்சி மாநகராட்சி கோவர்தன் கார்டன் கே.கே.நகர் பகுதியில் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலையானது சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்