புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-08-16 11:09 GMT

திருச்சி உறையூர்- குழுமணி சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பிரதான சாலையில் காமட்சியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் சாலையின் வளைவு பகுதியில் திடீரென சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்