நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-08-16 10:32 GMT

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே சந்தை பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையில் வியாபாரிகள் பொருட்களை அடுக்கி வைத்து உள்ளனர். மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்