சேறும், சகதியுமான சாலை

Update: 2023-08-13 17:30 GMT

திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட அருணா அவென்யூ 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால் தற்போது உள்ள மண் சலையில் பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார்சாலையாக மாற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்