விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆப்பனூர் வழியாக அழகாபுரி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.