அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-08-13 12:06 GMT
மங்களூர் ஒன்றியம், போத்திரமங்கலம் அம்மா பொண்ணுநகரில் உள்ள 8 தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 17 ஆண்டுகளாக சாலை உள்ளிட்ட அடைப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக மழைக்காலங்களில் மாணவ-மாணவிகள், வயதானவர்கள் தெருவில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. எனவே இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்