தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் கால்நடைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், பெண்களை அவ்வப்போது முட்டிவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்றுகொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?