சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-24 16:32 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கொண்டப்பநாயக்கன்பாளையம் தெருவில், எம்.ஜி.ஆர். சாலை, அறந்தாங்கி முக்கம், அண்ணாசிலை முதல் காந்தி சிலை வரையிலான சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்