பாதியில் நிற்கும் சாலை பணி

Update: 2023-08-02 10:25 GMT

கோவை கவுண்டம்பாளையம் அருகே பாப்பநாயக்கன்புதூர் விவேகானந்தர் வீதியில் தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி தனித்தீவாகவே மாறிவிட்டது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல மிகவும் சிரமம் அடையும் நிலை உள்ளது. எனவே பாதியில் நிற்கும் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்