சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-07-24 15:01 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவாலி பகுதி கீழச்சாலை கிராமத்தில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி .  குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்