விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Update: 2023-07-30 15:08 GMT

திண்டுக்கல்லை அடுத்த கூட்டாத்துப்பட்டி அருகே குளத்தூரில் இருந்து பாடியூர் செல்லும் சாலையில் செல்போன் கேபிள் வயர் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மணல் சாலையில் பரவி கிடக்கிறது. பணிகள் முடிந்து பள்ளம் மூடப்பட்டாலும் சாலையில் பரவிய மணல் அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்