போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-07-30 09:06 GMT

கோவை கணுவாய் பகுதியில் இருந்து வடவள்ளி பகுதிக்கு செல்லும் வழியில் ஆசிரியர் காலனி பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் மாதக்கணக்கில் ஆகியும் அந்த பணி முடிவடையவில்லை. மேலும் குழியும் மூடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்