கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2023-07-26 17:40 GMT

நெல்லை- பாபநாசம் இடையே புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேரன்மாதேவி யூனியன் அலுவலகத்தில் இருந்து ஆர்.சி. நடுநிலைப்பள்ளி வரையிலும் சாலை அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்லும்போது சாலையில் புழுதி பறப்பதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காலை, மாலையில் சாலையில் தண்ணீர் தெளிக்கவும், சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றவும் வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்